Apr 11, 2026

கணபதியின் முதல் பிரத்யேக ஊடகம் – "கணபதி டைம்ஸ்" விரைவில் ஆரம்பம்!

ணபதியின் பிரத்யேக முதல் உள்ளூர் செய்தி ஊடகமான கணபதி டைம்ஸ் (Ganapathy Times), மிக விரைவில் தனது சேவையைத் தொடங்க உள்ளது. நமது பகுதியின் குரலாக ஒலிக்கும் இந்த ஊடகம், கணபதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அன்றாடச் செய்திகள், பண்பாட்டு விழாக்கள் மற்றும் சமூக மாற்றங்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளது. செய்திகள் மட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்கள், அரசு சார்ந்த பொது அறிவிப்புகள் மற்றும் உள்ளூர் வணிகங்களின் வளர்ச்சி குறித்த அப்டேட்டுகள் என ஒரு முழுமையான தகவல் களஞ்சியமாக இது செயல்படவுள்ளது.

நமது சமூகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில், செய்திகள் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர விரும்புவோர் எங்களை அணுகலாம். வணிக நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், முக்கிய பொது அறிவிப்புகளை வெளியிடவும், எங்களுடன் இணைந்து பணியாற்றவும் கணபதி டைம்ஸ் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்திய அரசின் பத்திரிகைப் பதிவாளர் ஜெனரல் (PRGI) அமைப்பில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஊடகம், நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகளை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளது.

மேலும், கணபதி டைம்ஸ் இதழின் அச்சுப் பிரதியை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் வீட்டுத் தேடி செய்திகள் வர விரும்பினால், +91 8428 641006 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் இலவசப் பிரதியைப் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ganapathytimes@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது www.ganapathytimes.in என்ற இணையதள வாயிலாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம். கணபதி பகுதியின் புதிய அடையாளமாக மலரவிருக்கும் இந்த முயற்சியில் இணைந்து பயனடைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.